அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் ரூ.8 லட்சம் பரிசு என அறிவிப்பு


அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் ரூ.8 லட்சம் பரிசு என அறிவிப்பு
x

அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

வாஷிங்டன்,

குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் அமெரிக்காவிற்கு எப் 1 மாணவர் விசாவில் 2016இல் சென்றிருக்கிறார். அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அங்கு இருந்து வெளியேறி இருக்கிறார்.

அதற்கு பிறகு அவரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் 2019 மே 1ஆம் தேதி, இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு மையம், காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷி பெயரை சேர்த்து இருக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மயூஷி பகத் இருப்பிடம் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது . அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.33 லட்சம் ஆகும்.


Next Story