தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி


தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி
x

தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.

கேப் டவுண்,

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று முன் தினம் இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது.

அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் நேற்று அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story