பிரேசிலில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை: ஏழு பேர் பலி

x
தினத்தந்தி 14 Dec 2021 10:17 AM IST (Updated: 14 Dec 2021 10:17 AM IST)
பிரேசிலில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரியோ டி ஜெனீரோ,
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணத்தில் பலத்த கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்தனர். மேலும் மீட்புப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





