அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் திட்டம் முறியடிப்பு: உக்ரைன் தகவல்


Photo Credit: AP
x
Photo Credit: AP
தினத்தந்தி 28 March 2022 2:36 PM GMT (Updated: 28 March 2022 2:36 PM GMT)

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷிய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷிய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தகவலை கீவ் போஸ்ட் என்ற உக்ரைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

இது குறித்து கீவ் போஸ்ட் செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ரஷியாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய ராணுவ குழு ஸ்லோவேகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது. இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்ததில் இருந்தே, ரஷியாவின் முதல் இலக்காக நான் தான் இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். மேலும்,  ரஷியாவின் நாசக்கார படைகள் கீவ் நகரில் நுழைந்து இருப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அப்படைகள் தேடி வருவதாக் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் போது குறிப்பிட்டார். 


Next Story