சீனாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்
சீனாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.
பிஜீங்,
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகள் முடக்கப்பட்டுள்ளாதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story