இந்தோனேசிய கடலில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் பலி


இந்தோனேசிய கடலில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் பலி
x

இந்தோனேசிய கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 மீனவர்கள் பலியாகினர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு ஜாவா மாகாணம் கிரஜகன் துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்கு படகில் சென்றனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தங்கியிருந்து வலைவிரித்தப்படி அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அதிகாலையில் கடல் கொந்தளிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் பெரும் அலைகள் எழுப்பி மீனவர்களின் படகினை தாக்கியது.

இதனால் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 27 மீனவர்கள் கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்த கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதில் கடலில் மூழ்கி 4 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆங்காங்கே தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மாயமாகி காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story