பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி- 15 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.
குவெட்டா,
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு போலீசார் உட்பட4 பேர் உயிரிழந்தனர். மேலும்15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் உள்ள பரபரப்பான சந்தையில் காவல்துறை வாகனத்தை குறிவைத்து குண்டு வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பிரிவினைவாத குழு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
Next Story