வியட்நாமில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கம் - மக்கள் அதிர்ச்சி


வியட்நாமில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கம் - மக்கள் அதிர்ச்சி
x

கோப்புப்படம்

இந்திய நேரப்படி காலை 8.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹனோய்,

வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் உள்ள கோன் ப்லாங் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 8.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story