நாயுடன் பாலியல் உறவு கொண்ட இளம்பெண் அளித்த விளக்கம்; போலீசார் அதிர்ச்சி


நாயுடன் பாலியல் உறவு கொண்ட இளம்பெண் அளித்த விளக்கம்; போலீசார் அதிர்ச்சி
x

அமெரிக்காவில் நாயுடன் பாலியல் உறவு கொண்ட இளம்பெண் அளித்த விளக்கம் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்,

அமெரிக்காவில் மிஸ்ஸிசிப்பி நகரில் ஜோன்ஸ் கவுன்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் டெனிஸ் பிரேசியர் (வயது 19). இந்நிலையில், ஸ்னாப்சேட் வீடியோ ஒன்றில், ஆண் நாய் ஒன்றுடன் டெனிஸ் பாலியல் உறவு கொண்ட வீடியோ வைரலானது.

கடந்த பிப்ரவரியில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த அவரது அண்டை வீட்டுக்காரர் அதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனால், போலீசார் அதுபற்றி விசாரிக்க அவரை அணுகி உள்ளனர். அவர் நாய்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோவாக பதிவும் செய்து வைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, கவுன்டியின் காவல் அதிகாரியான கார்டர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது 17 ஆண்டு கால காவல் பணியில், நான் விசாரித்ததிலேயே அதிக மனவருத்தம் ஏற்படுத்தும் விசயங்களில் இது ஒன்று என கூறியுள்ளார்.

ஜோன்ஸ் கவுன்டி ஷெரீப் துறையிடம் பல்வேறு வீடியோக்கள் கிடைத்து உள்ளன. ஆனால், அவற்றை வெளியிடுவதற்கோ அல்லது அதுபற்றிய விசயங்களை பகிர்ந்து கொள்ளவோ எங்களுக்கு சுதந்திரம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

டெனிசிடம் நடத்திய விசாரணையில், வீடியோவில், நாயுடன் பாலியல் உறவில் இருப்பது அவர் தான் என போலீசாரிடம் டெனிஸ் ஒப்பு கொண்டு உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஆனால், இதுபோன்று செய்யும்படி தன்னை அச்சுறுத்தினார்கள். அதற்காக தனக்கு அவர்கள் பணம் கொடுத்தனர் என டெனிஸ் தன்னை தற்காத்து கொள்ளும் வகையில் போலீசிடம் தெரிவித்து உள்ளார் என அதிகாரி கார்ட்டர் கூறியுள்ளார்.

இதுபோன்றதொரு வழக்கை நாங்கள் கையாண்டதே இல்லை என்றும் கார்ட்டர் கூறியுள்ளார். இதேபோல பல வீடியோக்கல் பல பகுதிகளில் படம் ஆக்கப்பட்டு இருக்க கூடும் என கார்ட்டர் யூகம் தெரிவித்து உள்ளார். அந்த பகுதியில் உள்ள ஷெரீப் அலுவலகங்களில் இதனை பற்றி தெரிவித்து உள்ளோம் என கூறியுள்ளார்.

டெனிசை கைது செய்த போலீசார், வீட்டில் இருந்த அந்த வளர்ப்பு பிராணிகளை அருகேயுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

இவரது வீட்டில் பல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயும் ஒன்றாகும். இதனை ஒரு சேவைக்காக வைத்திருக்கிறோம் என அவர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

விலங்குகளை துன்புறுத்தினால் 6 மாத சிறை வரையே கிடைக்கும். ஆனால், இந்த வழக்கில் டெனிசுக்கு 10 வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும் வரையாவது, விலங்குகளிடம் இருந்து தள்ளியே இருக்கும்படி டெனிசிடம் நீதிபதி கூறியுள்ளார்.

1 More update

Next Story