அமேசான் காட்டிற்குள் விமான விபத்து: 160 ராணுவ வீரர்கள் 40 நாட்கள் தீவிர தேடுதல் - கைக்குழந்தை, 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு


அமேசான் காட்டிற்குள் விமான விபத்து: 160 ராணுவ வீரர்கள் 40 நாட்கள் தீவிர தேடுதல் - கைக்குழந்தை, 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
x

விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பொஹொடா,

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், கொலம்பியாயாவில் அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம்.

அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் அதிஷ்டவமாக 13 வயது, 9 வயது, 4 வயது, 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை என்ன? என தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 160 ராணுவ வீரர்கள், அமேசான் காடு பற்றி அறிந்த 70 பழங்குடியினர் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், 40 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்/சிறுமிகள் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 பேரும் அமேசான் காட்டில் வேட்டையாடியும், மீன்களை பிடித்து சாப்பிட்டும் உயிர் பிழைத்துள்ளனர். மீட்கப்பட்ட 4 பேரும் மிகுந்த உடல்நலக்குறைவுடன் உள்ளதாகவும், மருத்துவக்குழு தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும் கொலம்பிய அதிபர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் இருந்து தப்பிய குழந்தை உள்பட 4 சிறுவர்,சிறுமியர் அமேசான் காட்டில் 40 நாட்கள் உயிர்பிழைந்த நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story