ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்- 14 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் குலுங்கியது. இதில் 14 பேர் வரை பலியாகியுள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் குலுங்கியது. இதில் 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 78 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு அப்கானிஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் இதேபோன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலருக்கும் இந்த 2022 நிலநடுக்கம் குறித்த அதிர்வு நீங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story