வங்காளதேசம் வெள்ளம்; பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு


வங்காளதேசம் வெள்ளம்; பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு
x

வங்காளதேசத்தில் கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.

வங்காளதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கனமழையால் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

1 More update

Next Story