சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு


சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம்

சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசுமுறை பயணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்யா நாடுகளுக்கு சமீபத்தில் லூங் சென்று வந்தநிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது முகநூல் பதிவில் லூங் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது நண்பரும் சிங்கப்பூர் பிரதமருமான லீ சியென் லூங் விரைவில் குணம் பெற விரும்பும் வகையில் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story