மெதுவாக சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து - 14 பேர் பலி


மெதுவாக சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து - 14 பேர் பலி
x

மெதுவாக சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பஸ் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லாரி மீது பஸ் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story