ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?


ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?
x
தினத்தந்தி 9 Dec 2023 3:34 AM GMT (Updated: 9 Dec 2023 6:43 AM GMT)

ஹாமஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், போர் நிறுத்த தீர்மானம் அவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என அமெரிக்கா கூறியது.

வாஷிங்டன்,

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த போரால் , காசாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

ஹாமஸ் அமைப்பிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Next Story