ஹாங்காங்: சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன


ஹாங்காங்:  சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 Sep 2023 1:24 AM GMT (Updated: 2 Sep 2023 6:39 AM GMT)

ஹாங்காங்கில் சாவோலா சூறாவளி எதிரொலியாக, 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பள்ளிகள் மூடப்பட்டன.

ஹாங்காங்,

சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது.

இதனால், முன்னெச்சரிக்கையாக 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று மதியம் முதல் இன்று காலை 10 மணி வரை 460 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனால், விமான நிலையங்களில், ஹாங்காங் நகரில் இருந்து வேறு இடங்களுக்கு புறப்பட்டு செல்ல இருந்த பயணிகள் மற்றும் ஹாங்காங் நோக்கி வரவிருந்த பயணிகளை வரவேற்க காத்திருந்த பயணிகள் பரிதவித்தனர்.

ஹாங்காங்கில் பள்ளிகள் திறப்பும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பங்கு சந்தைகளின் வர்த்தகமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

சூறாவளி எதிரொலியாக, ரெயில் போக்குவரத்து சேவையும் அந்த பகுதியில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை இந்த மாகாணத்தில் ரெயில்கள் வருவதற்கோ அல்லது ரெயில்கள் புறப்பட்டு செல்வதற்கோ அனுமதிக்கப்படாது.

இதனால், கடலோர பகுதிகளில் தீவிர வெள்ள பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இன்று மெல்ல சூறாவளி பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகமும் குறையும்.


Next Story