எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்


எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்
x

கோப்புப்படம்

இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுப்பார் என்று கோஹர் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 8-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியபோதும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இது அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், போராட்டத்துக்கும் வழிவகுத்தது. அதன் எதிரெலியாக தேர்தல் ஆணையம் முடிவுகளை வேகமாக அறிவிக்க தொடங்கியது. இருந்தபோதிலும் வாக்கு எண்ணிக்கை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

அதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 27 இடங்களில் பிற சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் தற்போதைய சூழலில் எந்த கட்சியும் அதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதே சமயம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி, வெற்றியை கொண்டாட தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், பி.டி.ஐ. கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பார் என இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் பாரிஸ்டர் கோஹர் அலி கான் தெரிவித்துள்ளார்

மேலும் தேசிய சட்டமன்றத்தில் 170 இடங்களில் பி.டி.ஐ. வெற்றி பெற்றது. இருப்பினும், அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, கட்சி 100 இடங்களைப் பெற்றுள்ளது. எங்களுக்கு யாருடனும் சண்டை இல்லை, நாங்கள் முன்னேற விரும்புகிறோம். அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி நாங்கள் ஆட்சி அமைப்போம். பி.டி.ஐ.க்கு எந்த தடையையும் உருவாக்கக்கூடாது, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்" என்றும் கோஹர் கான் கூறினார்.


Next Story