எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!


எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!
x

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி பழி சுமத்தியுள்ளார்.

சியோல்,

வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன்னின் சகோதரியான யோ ஜாங், தங்கள் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று அந்நாட்டின் மீது பழி சுமத்தியுள்ளார்.

தென்கொரிய எல்லையிலிருந்து வடகொரிய மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, பலூன்கள் மற்றும் காகிதங்கள் மூலம் எல்லை தாண்டி வீசப்படும் அல்லது பறக்கவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த செயலுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்ணாக கருதப்படும் யோ ஜாங், தென்கொரியாவின் இத்தகைய செயல்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றமாகும் என்று தெரிவித்தார்.

தொற்று பாதித்த நபர்கள் மூலம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பும் பல நாடுகளும் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தென்கொரியாவிலிருந்து அனுப்பப்படும் பலூன் போன்ற பொருட்களின் மூலம் தங்கள் எல்லைக்குள் கொரோனா பரவுகிறது என்றார்.

இன்னும் இத்தகைய பலூன்கள் பறந்தால் வடகொரியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், கொரோனா வைரசை ஒழித்துக்கட்டியது போல தென்கொரிய அதிகரிகளையும் கையாள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பலூன்கள் மூலம் கொரோனா பரவுகிறது என்பதை தென்கொரியா மறுத்துள்ளது.


Next Story