ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்கு எதிராக வழக்கு - ஒலி மாசு ஏற்படுவதாக புகார்


ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்கு எதிராக வழக்கு - ஒலி மாசு ஏற்படுவதாக புகார்
x

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் உள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒலி மாசுபாட்டிற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ராணுவ தளத்தைச் சுற்றி சுமார் 5 முதல் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ராணுவ தளத்தில் விமானங்கள் மூலம் ஏற்படும் இறைச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் செயல்பட்டு வரும் இந்த யோகோடா ராணுவ தளத்திற்கு எதிராக கடந்த 1976-ம் ஆண்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல முறை வழக்குகள் தொடரப்பட்டதாகவும், தற்போது 14-வது முறையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story