'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' - ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்

போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார்.
பியாங்யாங்,
வடகொரியாவில் விமானப்படை வீரர்கள் தினத்தையொட்டி, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு நேரில் சென்றார். இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்கள் வான் சாகசங்களை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது, போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார். எதிரிகளின் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு வடகொரிய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





