ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க 163 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் அரசு


ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க 163 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் அரசு
x

சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு இன்று 163 விசாக்களை வழங்கி உள்ளது.

இஸ்லாமாபாத்,

ஜூன் 8-17 வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர திருவிழாவிற்காக, சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு இன்று 163 விசாக்களை வழங்கி உள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குரு அர்ஜன் தேவ் தியாக தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் இந்த விசா வழங்கும் முயற்சியை மேற்கொண்டது.

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் 'யாத்ரீகர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களுக்கு நிறைவான யாத்திரை அமைய வாழ்த்துக்களையும்' உயர் கமிஷன் பொறுப்பாளர் அப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

1974 இன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள். இந்த பயணத்தின் போது, யாத்ரீகர்கள் வேறு வேறு இடங்களுக்கிடையில், பஞ்ச சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் செல்வார்கள்.

மற்ற நாடுகளில் இருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இந்தியாவில் இருந்து வழங்கப்படும் விசாக்களுடன் கூடுதலாக வழங்கப்பட்ட விசாக்கள் இவை ஆகும். அவர்கள் ஜூன் 8 அன்று பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜூன் 17, 2022 அன்று இந்தியா திரும்புவார்கள்.


Next Story