கால்பந்து ஜாம்பவான் பீலே அனுமதிக்கபப்ட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் - பரபரப்பு...!


கால்பந்து ஜாம்பவான் பீலே அனுமதிக்கபப்ட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் - பரபரப்பு...!
x

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலா,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது.

இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. மேலும், நுரையீரல், இயத செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீலே சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இன்று அவரது குடும்பத்தினர் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை பீலே உடன் கொண்டாட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story