பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x

பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ட் மோரெஸ்பை,

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடு வந்தனர்.

அந்நாட்டில் உள்ள கிம்பே நகரில் இருந்து 108 கி.மீ. வடமேற்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு நேரப்படி மாலை 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story