இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு


இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு
x

இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சம் அடைந்து கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகையினை கைப்பற்றினர்.

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றியுள்ளனர்.

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுருந்தார். மேலும், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். உரிய தரப்பிடம் அரசு அலுவலகங்களை ஒப்படைக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் போராட்டகாரர்கள் எப்போது வேண்டுமானாலும் அலுவலகங்களில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இன்று பகல் 12 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story