ஜப்பானில் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல் - 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு


ஜப்பானில் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல் - 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு
x

பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணையில் சுமார் 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story