தென்ஆப்பிரிக்க கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்தவர்கள் பள்ளி மாணவர்கள்


தென்ஆப்பிரிக்க கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்தவர்கள் பள்ளி மாணவர்கள்
x

கோப்புப்படம்

தென்ஆப்பிரிக்க கேளிக்கை விடுதியில் தேர்வு முடிவை கொண்டாட சென்ற பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 21 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள் இறந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த 22 பேரும் பள்ளி மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். தென்ஆப்பிரிக்காவில் 18 வயது நிரம்பாதவர்கள் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும்.

மாணவர்கள் 22 பேரும் உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாடுவதற்காக கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா, இளம் வயதினருக்கு மது வழங்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என கூறினார்.


Next Story