தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் பாதிப்பு


தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் பாதிப்பு
x

தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சியோல்,

தென் கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் அரிசியின் விலை கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்ததை விட இந்த ஆண்டு 24.9 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் சமீப காலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே சமயம் உற்பத்திக்கான செலவினங்கள் உயர்ந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள விவசாயிகள் செலவுகளை ஈடு செய்யவும், கடன்களை திருப்பி செலுத்தவும் முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனிடையே அரிசி விலையை நிலைப்படுத்த அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு உற்பத்தியில் 20 சதவீதத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் வரும் அக்டோபர் 20-ந்தேதி முதல் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் அரிசியை கையிருப்பில் வைக்க தென் கொரிய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story