ஜெருசலேமில் பஸ் நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் காயம்


ஜெருசலேமில் பஸ் நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் காயம்
x

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

ஜெருசலேம்,

ஜெருசலேம் நகரின் நுழைவு பகுதியில் இன்று காலை பரபரப்பான நேரத்தில் 2 பேர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல் நாட்டின் மேகன் டேவிட் ஆடம் என்ற ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இதில், தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்சுகள் காணப்பட்டன. போலீசாரும் பாதுகாப்பிற்காக அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story