அமெரிக்காவில் 'எச்-1 பி' விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல் நடத்த முடிவு - இந்திய விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சி


அமெரிக்காவில் எச்-1 பி விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல் நடத்த முடிவு - இந்திய விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சி
x

‘எச்-1 பி’ விசா குலுக்கல் விரைவில் நடத்தப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி' விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டும் 85 ஆயிரம் 'எச்-1 பி' விசா வழங்கப்படுகிறது. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் நிதி ஆண்டுக்கான 'எச்-1 பி' விசா குலுக்கல் கடந்த மார்ச் மாதம் நடந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த 'எச்-1 பி' விசா குலுக்கல் 2024-ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யவில்லை என்பதால் 2-வது முறையாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த குலுக்கல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.

முதல் குலுக்கலில் தேர்வு ஆகாத பல விண்ணப்பதாரர்களுக்கு இந்த 2-வது குலுக்கல் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இவர்களில் நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் அடங்குவர். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story