உக்ரைன் போர் எப்போது முடியும்? அதிபர் ஜெலன்ஸ்கி பதில்


உக்ரைன் போர் எப்போது முடியும்? அதிபர் ஜெலன்ஸ்கி பதில்
x

போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்குள்ள ஒரு டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ராஜ்ய ரீதியில் (பேச்சு வார்த்தை மூலம்)தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சு வார்த்தைக்குப்பின்னர்தான் போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story