மாங்கனி விநாயகர்

x
தினத்தந்தி 16 Aug 2018 9:36 AM (Updated: 16 Aug 2018 9:36 AM)


ஞானப்பழத்தைக் கேட்டு, போட்டி நடைபெற்ற பொழுது ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து ‘அம்மையப்பன் தான் உலகம்.
எனவே இது உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.
அங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கின்றது.
இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire