விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விற்பனைக்கு வந்த சிறிய வடிவிலான மண் பிள்ளையார்கள்


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விற்பனைக்கு வந்த சிறிய வடிவிலான மண் பிள்ளையார்கள்
x

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட சிறிய வடிவிலான மண் பிள்ளையார்

சென்னையில் உள்ள பிரதான மார்க்கெட் பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ள சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பொதுமாக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

சென்னை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம், தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், மூலக்கடை உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சிலைகள் ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மண் பிள்ளையார் சிலைகள் தற்போது விருவிருப்பாக விற்பனையாகி வருகின்றது.

இதே போன்று, விநாயகர் சதுர்த்தி விழா வழிபாட்டில் வைக்கப்படும் பிரதான பொருட்களான கரும்பு, விளாம்பழம், கம்பு மற்றும் சோளம் போன்றவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தன. இன்றும் நாளையும் பூ மற்றும் பழங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வியாபரிகள் தெரிவித்தனர்.


Next Story