திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
x

கோப்புப்படம் 

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சுகள் அனைத்தும் நிரம்பி ஏடிசி சர்க்கிள் பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story