திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது
x

பவுர்ணமியை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து செல்கின்றனர். மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில், தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (புதன்கிழமை) இரவு 10.06 மணிக்கு தொடங்கி நாளை 25-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story