வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்
பிள்ளையார்பட்டி
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வலம்புரிபாலச்சந்திர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் விநாயகர் புறப்பாடு நடந்தது. முன்னதாக 108 அஷ்டோத்திர கலசாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள ஹரித்திர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






