கோவில் தேரோட்டம்


கோவில் தேரோட்டம்
x

அதிராம்பட்டினம் அருகே மழை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 17-ந் தேதி ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.










Next Story