அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்


அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்
x
தினத்தந்தி 27 Jan 2018 6:18 AM GMT (Updated: 27 Jan 2018 6:18 AM GMT)

பூமியின் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீரை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி நிலத்தின் வரைபடத்தை கொண்டு பாறைகளை அளவிட்டு, அவை எந்த வகையை சேர்ந்தவை என்று அறிந்து, பொருத்தமான தளங்களில் ஆழ்குழாய் தோண்டப்படுகிறது. பெரும்பாலும், சுண்ணாம்பு பாறைகள் உள்ள பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் இருக்கும் சாத்தியம் உள்ளதால், நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்க பரிந்துரை செய்கின்றனர்.

கிணற்று நீர் ஆய்வு

குறிப்பாக, ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய இடத்திற்கு அருகில் ஏற்கனவே உள்ள கிணறுகள் பற்றிய தகவல்களை அறிவார்கள். அதன் மூலம் கிணறுகளில் எவ்வகை பாறை படிமங்கள் அமைதிருக்கின்றன என்பதை அறிந்து, ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள், ஏரியல் (கிமீக்ஷீவீணீறீ) புகைப்படங்களை ஆய்வு செய்து, அதன் மூலம் பாறைப் படுகைகளை கண்டறிந்து அந்த பகுதியில் கிணறு அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் கிடைக் கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

மண் தரப்பரிசோதனை

பொதுவாக, பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் பாறை இடுக்குகளில் இருப்பது இயற்கை. அதை கண்டுபிடிக்க பூமியில் ஆழ்துளை இடுவதன் மூலம் பூமியின் மாதிரிகள் அதாவது மண்ணின் தரத்தை துளை இயந்திரம் நமக்கு வெளிக்கொண்டு வந்து காட்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் இருக்குமா என்பதை கண்டறியலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்டவை தவிரவும், தற்போது வெவ்வேறு விதமான நவீன முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 

Next Story