வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர்...


வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர்...
x
தினத்தந்தி 1 Dec 2018 6:42 AM GMT (Updated: 1 Dec 2018 6:42 AM GMT)

வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர் செய்ய வேண்டிய விஷயங்கள்...

* வீட்டின் மீதான ‘பிணை உரிமை’ விலக்கப்பட்டதற்கான ஆவணத்தை வங்கியிடமிருந்து, பெற்றுக்கொள்ள வேண்டும்.

* கடன் பெற்றவர் பெயர் மற்றும் வங்கி கடன் எண், தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது என்ற தகவல் கொண்ட தடையில்லா சான்றையும் (என்.ஓ.சி) பெறவேண்டும்.

* வீட்டுக்கான ‘ஒரிஜினல்’ பத்திரங்களை வங்கி திருப்பி தரும்போது ஆவணங்கள் நல்ல நிலையிலும், பக்கங்கள் விடுபடாமலும் இருப்பதை கவனித்து கொள்ளவேண்டும்

* வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் ‘சிபில்’ விவரங்கள் ‘அப்டேட்’ ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.

* வங்கியிலிருந்து பெற்ற வீட்டு பத்திரங்களுக்கான வில்லங்க சான்றிதழில் வங்கியின் பிணை உரிமை நீக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

Next Story