ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி


ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி
x
தினத்தந்தி 2 Jun 2017 9:45 PM GMT (Updated: 2 Jun 2017 9:35 PM GMT)

ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.

திருச்சி,

ரெயலவே பாதுகாபபு சிறப்பு படையனருககான அகில இந்திய அளவிலான 30–வது கூடைப்பநது போடடி நேற்று காலை தருசச காஜாமலை ரெயலவே பாதுகாபபு படை மைதானததல தொடங்கியது. போட்டியை தருசச ரெயலவே பாதுகாபபு சிறப்பு படையின் சீனியர் கமாண்டிங் அதிகாரி அசரப தொடங்கி வைததார். இதில் திருச்சி, கோரகபூர, லகனா, செகந்திராபாத், முமபை உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்–அவுட் முறையில் நடந்த போட்டியில் முதலில் திருச்சி அணி, கோரக்பூர் அணியிடம் மோதியது.

இதில் 27–3 என்ற புள்ளி கணக்கில் கோரக்பூர் அணியை திருச்சி அணி வீழ்த்தியது. இதையடுத்து லக்னோ அணியிடம் மோதிய திருச்சி அணி 22–19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று இறுதி போட்டி

இறுதி போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.


Next Story