'டேய் லார்டு போதும் டா' -ஷர்துல் தாகூரை கண்டித்த அஸ்வின்


டேய் லார்டு போதும் டா -ஷர்துல் தாகூரை கண்டித்த அஸ்வின்
x

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழக அணிக்கு எதிராக ஷர்துல் தாகூர் சதமடித்து அசத்தினார்.

சென்னை,

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், ரஹானே தலைமையிலான மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 146 ரன்களை மட்டுமே அடித்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் மும்பை அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக போட்டியின்2-ம் நாளான இன்று இதுவரை 300 ரன்களுக்கு மேல் குவித்து தமிழக அணியை விட வலுவான முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது தமிழக அணி 146 ரன்களில் சுருண்டதற்கு மிக முக்கியமான காரணமாக ஷர்துல் தாகூர் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பந்துவீசிய அவர் 14 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கிய வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இருவரையும் ஆட்டமிழக்க வைத்தார். அதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் அடித்து அசத்தினார்.

இதனை கவனித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தின் மூலம் "டே லார்டு, போதும் டா" என்று அழுதபடி சிரிக்கும் எமோஜிக்களை வெளியிட்டு செல்லமாக அவரை கண்டித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story