நடப்பு ஐ.பி.எல் தொடரில் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த முதல் அணியான பெங்களூரு - ரசிகர்கள் வருத்தம்


நடப்பு ஐ.பி.எல் தொடரில் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த முதல் அணியான பெங்களூரு - ரசிகர்கள் வருத்தம்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

நடப்பி ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை மொத்தம் 10 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த 10 ஆட்டங்களில் முதல் 9 ஆட்டங்களில் உள்ளூர் அணிகளே வெற்றி பெற்றிருந்தன. இந்த வெற்றிப்பயணத்திற்கு கொல்கத்தா அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

அந்த வகையில் நேற்றையை ஆட்டத்தில் உள்ளூர் அணியாக களம் இறங்கிய பெங்களூரு அணி வெற்றி பெற்று உள்ளூர் அணிகளின் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் சொந்த மைதானத்திலேயே தோல்வி கண்டது.

இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பெங்களூரு மாறி உள்ளது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.


Next Story