கான்வே அதிரடி...பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்கு...!


கான்வே அதிரடி...பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்கு...!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 30 April 2023 11:49 AM GMT (Updated: 30 April 2023 1:57 PM GMT)

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் ஆடி வருகின்றன.

சென்னை,

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்று வரும் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஆடி வருகின்றன. முன்னதாக இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு நிதான ஆட்டத்துடன் அதிரடி ரன் வேட்கையில் ஈடுபட்ட இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 31 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கான்வேயுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் துபே 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய மொயீன் அலி 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜடேஜா களம் இறங்கினார். அவர் கடைசி ஓவரின் முதல் பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் தோனி களம் இறங்கினார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 92 ரன்கள் அடித்தார்.கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் தோனி. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் ஆட உள்ளது.


Next Story