சி.எஸ்.கே அணியில் விளையாட எனக்கும் ஆசை தான்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்


சி.எஸ்.கே அணியில் விளையாட எனக்கும் ஆசை தான்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்
x

கோப்புப்படம்

டி.என்.பி.எல், ஐ.பி.எல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன்.

சேலம்,

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாட கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். என் வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக சிவகார்த்திகேயன் தான் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டிற்கு பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்க முடியும். நான் வந்த பிறகு கிராமத்தில் இருந்து கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

வழிகாட்டுவதற்கு ஆள் இருந்தால் தான் இளைஞர்கள் முன் வர முடியும். எனது சின்னப்பம்பட்டி கிராமத்தில் நான் வந்தது போல பலரையும் உருவாக்கி வருகிறேன். அதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் இருப்பார். மறக்காமல் அவர்களை வைத்து முன்னேற வேண்டும். இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திறமையை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன்னேற வேண்டும். எதுவும் கஷ்டப்பட்டால் மட்டுமே கிடைக்கும் என்றார்.

சி.எஸ்.கே. அணியில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எதுவும் எங்கள் கையில் இல்லை. அணிகளில் கையில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பதால் சி.எஸ்.கே அணியில் விளையாட எனக்கும் ஆசை உள்ளது. தோனியிடம் விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். தோனியிடம் பேசினாலே ஒரு கூடுதல் புத்துணர்ச்சி. அவரது பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப் வரும்.

டி.என்.பி.எல், ஐ.பி.எல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன். ஐ.பி.எல் வந்தாலும் டி.என்.பி.எல் என்பது என்னை அடையாளம் காட்டியது. எனவே அதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்திய அணியில் நான் மீண்டும் விளையாடுவது, இந்த ஆண்டு ஐ.பி.எல் விளையாடுவதில் உள்ளது. நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story