தேவையான அளவு இளமையும், திறமையும் என்னிடம் இருக்கிறது - ரஹானே உற்சாகம்


தேவையான அளவு இளமையும், திறமையும் என்னிடம் இருக்கிறது -  ரஹானே உற்சாகம்
x

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், என்னில் நிறைய கிரிக்கெட் உள்ளது என கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ரஹானே கூறும்போது,

நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், என்னில் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்தேன். எனது பேட்டிங்கில் நான் பணியாற்ற வேண்டிய சில குறைபாடுகள் இருந்தன. நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன்.

நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் அணியின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.

அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் இப்போது சேர்க்கப்பட்ட பிறகும் எதுவும் மாறிவிடவில்லை. சிஎஸ்கே எனக்கு ஒரு ரோலைக் கொடுத்தது, நீங்கள் அந்த ரோலை நிறைவேற்ற முயற்சிக்கிறீர்கள். அதற்கு முன், எனது ரோல் ஒரு நங்கூரமாக நின்று ஆடுவதாக இருந்தது, அதன்படி நான் ஆடினேன்.

சிஎஸ்கே நிர்வாகம் என்னிடம், 'உனக்கு சுதந்திரம் இருக்கிறது, அதன்படி விளையாடு' என்று கூறியது. நான் உண்மையில் ஒரு ஸ்ட்ரோக்-மேக்கர், நான் எப்போதும் ரன்கள் எடுக்கப் பார்ப்பவன். ரோல் மாறிவிட்டது, வேறு எதுவும் மாறவில்லை. அணி எனக்கு அளிக்கும் பங்கை நிறைவேற்றுவேன் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன்.

ரோஹித் எனக்கு அளிக்கும் ரோலை நான் நிறைவேற்றுவேன். ரோஹித்தின் கீழ் விளையாடுவது சிறப்பானது. அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார், பின்னர் அவர்களை ஆதரிக்கிறார். இவையெல்லாம் ஒரு சிறந்த கேப்டனின் அடையாளங்கள். சிறந்த உறவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

நான் துணை கேப்டனாகப் பழகிவிட்டேன். ஏறக்குறைய ஐந்து வருடங்களாக கடுமையாக உழைத்தேன். ஆனால் மீண்டும் அணிக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். துணை கேப்டனாக திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story