ரன்கள் குவிக்க தவறினால் விமர்சனங்களே எழும்... கேஎல் ராகுல் குறித்து கங்குலி கருத்து


ரன்கள் குவிக்க தவறினால் விமர்சனங்களே எழும்...  கேஎல் ராகுல் குறித்து கங்குலி கருத்து
x

கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

கொல்கத்தா,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டியில் கே.எல்.ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால், அவரிடமிருந்து டெஸ்ட் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் விளையாடும் போதே உங்களால் ரன்னடிக்க முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என்று தனது கருத்தினை கங்குலி வெளிப்படையாக கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-

உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை. இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள்.

துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்வு குழுவினர் தொடர்ச்சியாக அவரை கவனித்து வந்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது திறனை பார்த்து வருவதாலேயே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.


Next Story