ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
x

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை - குஜராத் இடையிலான ஆட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேடிஎம் ( Paytm) மற்றும் www.insider.in. ஆகிய இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி, டி, இ, ஸ்டாண்டின் கீழ் தளத்துக்கான டிக்கெட் ரூ.1,700-க்கும், இதன் மேல் தளத்துக்கான டிக்கெட் ரூ.3,500-க்கும், ஐ, ஜெ, கே, ஸ்டாண்டின் மேல் தளத்துக்கான டிக்கெட் ரூ.2,500-க்கும், இதன் கீழ் தளத்துக்கான டிக்கெட் ரூ.4 ஆயிரத்துக்கும், கே.எம்.கே. ஸ்டாண்டின் பால்கனிக்கான டிக்கெட் ரூ.6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story