ஐ.பி.எல்; குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்; குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @IPL

மும்பை அணியின் கேப்டனாக பாண்ட்யாவும், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்பட உள்ளனர்.

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். ரோகித் சர்மா சாதாரண வீரராக விளையாட உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story