சவால்களை விரும்பி எதிர்கொள்ளும் அவர் நிச்சயம் பெரிய வீரராக வருவார் - இளம் வீரருக்கு ரோகித் பாராட்டு


சவால்களை விரும்பி எதிர்கொள்ளும் அவர் நிச்சயம் பெரிய வீரராக வருவார் - இளம் வீரருக்கு ரோகித் பாராட்டு
x

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

தர்மசாலா,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி கைப்பற்றியது. அதோடு கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தவறவிடாமல் இருக்கும் இந்திய அணி அந்த கவுரவத்தையும் காப்பாற்றிக்கொண்டது.

இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டி முடிந்து வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரரான ஜெய்ஸ்வால் குறித்து பாராட்டி பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 'ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது அவர் மிகச் சிறப்பான நிலையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி ஒரு திறமை வாய்ந்த வீரர் நிச்சயம் பெரிய வீரராக மாறும் வாய்ப்பு உள்ளது.

பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்தே அழுத்தத்தை கொடுத்து அதிரடியாக விளையாட நினைக்கிறார். அவரிடம் நிறைய பாசிட்டிவான எண்ணங்கள் உள்ளன. மேலும் அவருக்கு எதிராக சவால்கள் அதிகம் இருந்தாலும் அந்த சவால்களை அவர் விரும்பி எதிர்கொள்கிறார். இதனால் அவர் நிச்சயம் பெரிய வீரராக வருவார். அவருக்கு இந்த இங்கிலாந்து தொடர் மிகச்சிறப்பான தொடராக அமைந்தது' என்று கூறினார்.

இந்த டெஸ்ட் தொடரில் 2 இரட்டை சதம் உட்பட 712 ரன்கள் குவித்து அசத்திய ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story