ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி தயார் - பீல்டிங் பயிற்சியாளர் தகவல்


ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி தயார்  - பீல்டிங் பயிற்சியாளர் தகவல்
x

ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி தயாராக இருப்பதாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி தயாராக இருப்பதாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story