வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்...புனே சென்றடைந்த இந்திய அணி...!


வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்...புனே சென்றடைந்த இந்திய அணி...!
x

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணி புனே சென்றடைந்தது.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வரும் 19ம் தேதி சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் புனேயில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இன்று புனே சென்றடைந்தனர்.





Next Story